அதிரடியாக உயர்த்த ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னை: இன்று ஓரு சவரன் அபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 240 உயர்வு ... தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை நாள்தோறும் சர்வதேச பங்கு சந்தை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்க செய்யப்பட்டு வருகிறது

அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 250 அதிகரித்துள்ளது. இதனையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 45,040க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று ஒரு தங்கம் ஒரு சவரனுக்கு ரூ. 320 சரிந்திருந்த நிலையில் இன்று திடீரென தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் நகை பிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தற்போது ஒரு சவரன் 45,0000 – ஐ தாண்டி விற்பனையாகி வருவது சாமானிய மக்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 30 அதிகரித்து 5,630 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ. 80.40 ஆகவும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80.400 -க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.