போட்டியில் தோல்வி... சிரித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு

பிரேசில்: கொடூரமான செயல் பிரேசிலில் நடந்தேறியுள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசிலில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் தொடர்ச்சியாக இரண்டு ஆட்டங்களில் தோல்வியடைந்ததற்காக ஒரு வீரரைப் பார்த்து சிரித்த 12 வயது சிறுமி உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சினாப் சிட்டி என்ற இடத்தில் உள்ள கிளப்பில் பில்லியர்ட்ஸ் விளையாட்டில் ஒலிவரா என்பவர் தொடர்ச்சியாக இருமுறை தோல்வியடைந்தார். இதனால் அங்கிருந்த சிலர் அவரைப் பார்த்து சிரித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது நண்பருடன் வந்து கிளப்பில் இருந்த 7 பேரை சுட்டுக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.