சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 10 ஆயிரத்து 628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,94,139 ஆக உள்ளது. 10,628 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,79,931 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 93% ஆக உள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,580 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் உயிரிழந்தோர் விகிதம் 1.84% ஆக உள்ளது.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-