கனடாவில் 24 மணிநேரத்தில் கொரோனாவால் 100 பேர் பலி

24 மணிநேரத்தில் 4641 பேர் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நான்காயிரத்து 641 பேர் பாதிக்கப்பட்டதோடு, 100பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், மூன்று இலட்சத்து 11ஆயிரத்து 109பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 11 ஆயிரத்து 186பேர் உயிரிழந்துள்ளனர்

மேலும், 51ஆயிரத்து 602பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 444பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இரண்டு இலட்சத்து 48ஆயிரத்து 321பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.