சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 11ஆயிரத்து 425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 97 ஆயிரத்து 116 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 35 ஆயிரத்து 480 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மற்ற மாவட்டங்களை விட கொரோனா பதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,92,527 ஆக உள்ளது. 11,425 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1 லட்சத்து 77 ஆயிரத்து 546 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,556 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-