தமிழகத்தில் கொரோனாவுக்கு புதிதாக 1,134 பேர் பாதிப்பு; 9, 781 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 1 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.

எனினும் கொரோனா தொற்றுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-

அரியலூர் - 10
செங்கல்பட்டு - 508
சென்னை - 3,037
கோவை - 1,066
கடலூர் - 89
தர்மபுரி - 96
திண்டுக்கல் - 154
ஈரோடு - 326
கள்ளக்குறிச்சி - 19
காஞ்சிபுரம் - 231
கன்னியாகுமரி - 194
கரூர் - 103
கிருஷ்ணகிரி - 149
மதுரை - 314
நாகை - 108
நாமக்கல் - 209
நீலகிரி - 147
பெரம்பலூர் - 4
புதுக்கோட்டை - 88
ராமநாதபுரம் - 28
ராணிப்பேட்டை - 81
சேலம் - 376
சிவகங்கை - 60
தென்காசி - 37
தஞ்சாவூர் - 130
தேனி - 75
திருப்பத்தூர் - 27
திருவள்ளூர் - 458
திருவண்ணாமலை - 93
திருவாரூர் - 103
தூத்துக்குடி - 123
திருநெல்வேலி - 155
திருப்பூர் - 555
திருச்சி - 156
வேலூர் - 280
விழுப்புரம் - 83
விருதுநகர் - 92
விமானநிலைய கண்காணிப்பு -17