தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நேற்று 1 ஆயிரத்து 134 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 9 ஆயிரத்து 781 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 170 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 ஆக அதிகரித்துள்ளது.
எனினும் கொரோனா தொற்றுக்கு நேற்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 10 செங்கல்பட்டு - 508 சென்னை - 3,037 கோவை - 1,066 கடலூர் - 89 தர்மபுரி - 96 திண்டுக்கல் - 154 ஈரோடு - 326 கள்ளக்குறிச்சி - 19 காஞ்சிபுரம் - 231 கன்னியாகுமரி - 194 கரூர் - 103 கிருஷ்ணகிரி - 149 மதுரை - 314 நாகை - 108 நாமக்கல் - 209 நீலகிரி - 147 பெரம்பலூர் - 4 புதுக்கோட்டை - 88 ராமநாதபுரம் - 28 ராணிப்பேட்டை - 81 சேலம் - 376 சிவகங்கை - 60 தென்காசி - 37 தஞ்சாவூர் - 130 தேனி - 75 திருப்பத்தூர் - 27 திருவள்ளூர் - 458 திருவண்ணாமலை - 93 திருவாரூர் - 103 தூத்துக்குடி - 123 திருநெல்வேலி - 155 திருப்பூர் - 555 திருச்சி - 156 வேலூர் - 280 விழுப்புரம் - 83 விருதுநகர் - 92 விமானநிலைய கண்காணிப்பு -17