தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா உறுதியான 1,04,027 பேரில் 11,856 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனா பாதிப்பால் 2,202 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 89,969 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். சென்னையில் 58.99% ஆண்கள், 41.01% பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 1,401 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் விபரம் வருமாறு:- கோடம்பாக்கம் - 1,349 அண்ணாநகர் - 1,198 அடையாறு - 1,012 திரு.வி.க.நகர் - 952 வளசரவாக்கம் - 900 தேனாம்பேட்டை - 804 ராயபும் - 796 தண்டையார்பேட்டை - 645 மாதவரம் - 568 ஆலந்தூர் - 520 பெருங்குடி - 484 சோழிங்கநல்லூர் - 482 திருவொற்றியூர் - 423 மணலி - 89 அம்பத்தூர் - 1,401