இந்தியா : புதியாக 1,190 பேருக்கு கொரோனா .... நேற்று முன்தினம் 1,326 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று இந்த எண்ணிக்கை 1,046 ஆக குறைந்த நிலையில் இந்த எண்ணிக்கை சற்று அதிகரித்து 1,190 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 55 ஆயிரத்து 828 ஆக உயர்ந்தது.
இதனை அடுத்து தொற்று பாதிப்பில் இருந்து இன்று 1,375பேர் மீண்டுள்ளனர். இதுவரை மட்டும் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 9 ஆயிரத்து 133 ஆக உயர்ந்தது. தற்போது 16,243 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நாடு முழுவதும் கொரோனாவால் 1,375 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,30,452ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், கேரளா, பஞ்சாப் மாநிலங்களில் அங்கு விடுபட்ட கொரோனா பலிகளில் கணக்கில் கொண்டு வந்தனர்.
மேலும் நேற்று ஒரே நாளில் 6 பேர் மட்டுமே கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் இதுவரை 219.66 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.