போர் தொடக்கத்தில் இருந்து 1.24 லட்ம் ரஷ்ய துருப்புகள் கொல்லப்பட்டதாக தகவல்

உக்ரைன்: 1.24 லட்சம் பேர்... போரின் தொடக்கத்தில் இருந்து 1 இலட்சத்து 24 ஆயிரம் ரஷ்ய துருப்புக்கள், கொல்லப்பட்டதாக உக்ரேனிய இராணுவம் கூறியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் கடந்த ஆண்டு ஆரம்பித்த நிலையில், ஒரு வருடத்தை அண்மித்துள்ளது. இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதத்தில் 1 இலட்சத்து 24 ஆயிரத்து 710 ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 850 பேர் கொல்லப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. உக்ரைனிய ஆயுதப்படைகள் ரஷ்ய இழப்புகள் குறித்த மதிப்பீடுகளை தவறாமல் வெளியிடுகின்றன.

மேலும் மொஸ்கோ மிகவும் அரிதாகவே இழப்புகள் பற்றிய விவகாரங்களை பகிர்ந்துகொள்கிறது.