சென்னையில் கொரோனாவுக்கு 12,765 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 12,765 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிகிச்சைக்கு பின் 1 லட்சத்து 83 ஆயிரத்து 956 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 935 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 99,794 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 12,765 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,606
அண்ணா நகர் - 1,385
தேனாம்பேட்டை - 1,062
தண்டையார்பேட்டை - 587
ராயபுரம் - 812
அடையாறு - 1,149
திரு.வி.க. நகர் - 1,050
வளசரவாக்கம் - 926
அம்பத்தூர் - 1,307
திருவொற்றியூர் - 400
மாதவரம் - 631
ஆலந்தூர் - 541
பெருங்குடி - 504
சோழிங்கநல்லூர் - 454
மணலி - 117