சென்னையில் கொரோனாவுக்கு 13,744 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தவர்களில் 13,744 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 94,695 ஆக உள்ளது. 13,744 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2,028 பேர் பலியாகியுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம்- 2,192
அண்ணா நகர்- 1,601
தேனாம்பேட்டை -1,116
தண்டையார்பேட்டை- 605
ராயபுரம் - 906
அடையாறு- 1,180
திரு.வி.க. நகர்- 1,171
வளசரவாக்கம்- 886
அம்பத்தூர்- 1,100
திருவொற்றியூர்- 441
மாதவரம்- 488
ஆலந்தூர்- 538
பெருங்குடி- 468
சோழிங்கநல்லூர்- 368
மணலி- 196