மேட்டூர் அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

மேட்டூர் : கர்நாடகத்தில் பருவ மழை மிக தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த மாதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக கடந்த மாதம் 16-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது.

இதையடுத்து அன்று முதல் நேற்று வரை அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே இருந்து கொண்டு வருகிறது. அணைக்கு வரும் வரத்து நீரானது உபரிநீராக அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மேலும் இந்நிலையில் காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 120.050 அடியாகவும், நீர் இருப்பு 93.5559 டி.எம்.சியாகவும் உள்ளதால், அணைக்கான நீர்வரத்து 1,44,000 கன அடியாகவும் உள்ளது.

இதனை தொடர்ந்து இதனால், அணையிலிருந்து 1,45,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும், கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகின்றது.