தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று மாநிலத்தில் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 46 ஆயிரத்து 79 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது மருத்துவமனையில் 18 ஆயிரத்து 825 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 2 ஆயிரத்து 308 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 15 ஆயிரத்து 892 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 71 செங்கல்பட்டு - 919 சென்னை - 5,813 கோவை - 1,000 கடலூர் - 218 தர்மபுரி - 209 திண்டுக்கல் - 146 ஈரோடு - 794 கள்ளக்குறிச்சி - 139 காஞ்சிபுரம் - 418 கன்னியாகுமரி - 248 கரூர் - 339 கிருஷ்ணகிரி - 310 மதுரை - 411 நாகை - 336 நாமக்கல் - 444 நீலகிரி - 287 பெரம்பலூர் - 52 புதுக்கோட்டை - 195 ராமநாதபுரம் - 70 ராணிப்பேட்டை - 258 சேலம் - 1,038 சிவகங்கை - 135 தென்காசி - 69 தஞ்சாவூர் - 244 தேனி - 79 திருப்பத்தூர் - 160 திருவள்ளூர் - 1,036 திருவண்ணாமலை - 382 திருவாரூர் - 307 தூத்துக்குடி - 373 திருநெல்வேலி - 252 திருப்பூர் - 1,047 திருச்சி - 332 வேலூர் - 313 விழுப்புரம் - 301 விருதுநகர் - 78 விமானநிலைய கண்காணிப்பு - 2