தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா... புதிதாக 2 ஆயிரத்து 522 பேர் பாதிப்பு

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு நேற்று புதிதாக 2 ஆயிரத்து 522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 14 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 27 ஆயிரத்து 734 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 4 ஆயிரத்து 029 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 75 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று 27 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 983 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக நேற்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-
அரியலூர் - 5
செங்கல்பட்டு - 144
சென்னை - 695
கோவை - 209
கடலூர் - 45
தர்மபுரி - 25
திண்டுக்கல் - 2
ஈரோடு - 76
கள்ளக்குறிச்சி - 22
காஞ்சிபுரம் - 98
கன்னியாகுமரி - 48
கரூர் - 25
கிருஷ்ணகிரி - 25
மதுரை - 57
நாகை - 35
நாமக்கல் - 68
நீலகிரி - 81
பெரம்பலூர் - 3
புதுக்கோட்டை - 25
ராமநாதபுரம் - 3
ராணிப்பேட்டை - 20
சேலம் - 146
சிவகங்கை - 19
தென்காசி - 5
தஞ்சாவூர் - 61
தேனி - 19
திருப்பத்தூர் - 38
திருவள்ளூர் - 115
திருவண்ணாமலை - 23
திருவாரூர் - 40
தூத்துக்குடி - 39
திருநெல்வேலி - 28
திருப்பூர் - 99
திருச்சி - 42
வேலூர் - 68
விழுப்புரம் - 39
விருதுநகர் - 27