ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


சென்னை: போக்குவரத்துத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :- ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகிற 20, 21, 22 ஆகிய தேதிகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் 3 மையங்களில் இருந்து 2,265 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

எனவே இதன்படி, தாம்பரம் ‘மெப்ஸ்’ பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி புறவழிச் சாலை (பணிமனை அருகே) மற்றும் கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும்.

மேலும் தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் மேல் குறிப்பிடப்பட்ட 3 நாட்களில் கூடுதலாகச் சென்னையில் இருந்து 2,265 சிறப்புப் பேருந்துகளையும்,

இதனை அடுத்து பெங்களூரு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பிறபகுதிகளுக்கு 1,700 சிறப்புப் பேருந்துகளையும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.