ஜப்பானில் சிக்கியிருந்த 235 இலங்கையர்கள் இன்று தாயகம் திரும்பினர்

இன்று அழைத்து வரப்பட்டனர்... கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

235 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் 455 ரக விமானத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அழைத்து வரப்பட்டனர்... கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கைக்கு திரும்ப முடியாமல் ஜப்பானில் சிக்கியிருந்த இலங்கையர்கள் இன்று தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

235 இலங்கையர்கள் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் 455 ரக விமானத்தின் ஊடாக இவர்கள் அனைவரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா பரவல் காரணமாக ஏராளமான இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். இவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவதில் இலங்கை அரசாங்கம் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.