இலங்கையில் கொரோனாவிலிருந்து 369 பேர் குணமடைந்தனர்

கொரோனாவிலிருந்து 369 பேர் குணமடைந்தனர்... இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 369 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 15 ஆயிரத்து 816 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரையில் 21 ஆயிரத்து 469 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 5 ஆயிரத்து 557 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 96 பேர் இதுவரை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.