தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் புதிதாக 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 643 ஆக அதிகரித்துள்ளது.
நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 51 ஆயிரத்து 344 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மற்றும் ரயில் மூலம் வந்த 396 பேரும் அடங்குவர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 26 ஆயிரத்து 670 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 626 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:- அரியலூர் - 109 செங்கல்பட்டு - 2,564 சென்னை - 14,952 கோவை - 1,314 கடலூர் - 487 தர்மபுரி - 264 திண்டுக்கல் - 841 ஈரோடு - 127 கள்ளக்குறிச்சி - 641 காஞ்சிபுரம் - 2,357 கன்னியாகுமரி - 1,584 கரூர் - 109 கிருஷ்ணகிரி - 191 மதுரை - 3,280 நாகை - 183 நாமக்கல் - 159 நீலகிரி - 237 பெரம்பலூர் - 52 புதுக்கோட்டை - 554 ராமநாதபுரம் - 750 ராணிப்பேட்டை - 932 சேலம் - 834 சிவகங்கை - 881 தென்காசி - 821 தஞ்சாவூர் - 711 தேனி - 1,231 திருப்பத்தூர் - 157 திருவள்ளூர் - 3,475 திருவண்ணாமலை - 1,732 திருவாரூர் - 356 தூத்துக்குடி - 2,107 திருநெல்வேலி - 1,225 திருப்பூர் - 270 திருச்சி - 1,096 வேலூர் - 1,453 விழுப்புரம் - 726 விருதுநகர் - 2,186