கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 543 பேர் பாதிப்பு

கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 543 பேர் பாதிப்படைந்துள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இன்றளவில் 205க்கும் அதிகமான உலக நாடுகளில் பரவி லட்சக்கணக்கான உயிர்களை பறித்துள்ளது. இதில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 21வது நாடாக கனடா விளங்குகிறது.

வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 240ஆக உயர்ந்துள்ளது. இதுவரை எட்டு ஆயிரத்து 870பேர் உயிரிழந்துள்ளனர். 5 ஆயிரத்து 228 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 98 ஆயிரத்து 142 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, இரண்டு ஆயிரத்து 196 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.