தமிழகத்தில் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரேநாளில் 5 ஆயிரத்து 875 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது.
வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 316 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் நோய் தாக்குதலுக்கு நேற்று மேலும் 98 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 132 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம்:- அரியலூர் - 206 செங்கல்பட்டு - 2,817 சென்னை - 12,190 கோவை - 1,690 கடலூர் - 1,417 தர்மபுரி - 246 திண்டுக்கல் - 565 ஈரோடு - 162 கள்ளக்குறிச்சி - 986 காஞ்சிபுரம் - 3,439 கன்னியாகுமரி - 2,043 கரூர் - 260 கிருஷ்ணகிரி - 510 மதுரை - 2,354 நாகை - 337 நாமக்கல் - 328 நீலகிரி - 138 பெரம்பலூர் - 207 புதுக்கோட்டை - 874 ராமநாதபுரம் - 528 ராணிப்பேட்டை - 1,682 சேலம் - 1,166 சிவகங்கை - 388 தென்காசி - 1,097 தஞ்சாவூர் - 973 தேனி - 2,421 திருப்பத்தூர் - 470 திருவள்ளூர் - 3,430 திருவண்ணாமலை - 2,179 திருவாரூர் - 467 தூத்துக்குடி - 2,150 திருநெல்வேலி - 2,44 திருப்பூர் - 339 திருச்சி - 1,574 வேலூர் - 1,329 விழுப்புரம் - 979 விருதுநகர் - 2,297