இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் பலி

இஸ்ரேல்: நப்லஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பல ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. பாலஸ்தீன மேற்குக்கரை மற்றும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் தாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்தப் பகுதிகளை இஸ்ரேல் தாக்குகிறது. தொடர்ந்து உயிர்ச்சேதம் ஏற்படுகிறது.

இந்நிலையில், மேற்குக் கரையில் உள்ள நப்லஸ் நகரில் இஸ்ரேல் ராணுவம் இன்று நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

சுமார் 50 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு தீவிரவாத குழுக்களும் பதிலடி கொடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய இராணுவம் அதன் படைகள் வடக்கு மேற்குக் கரையில் இருப்பதை உறுதிப்படுத்தியது. இஸ்ரேலியப் படைகள் பலஸ்தீனர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது .

அதற்கு பதிலடியாக பாலஸ்தீனியர்கள் டயர்களை எரித்ததாகவும், ராணுவ வாகனங்களை கற்களால் தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 3 மணி நேரத்துக்கு பிறகு ராணுவத்தினர் ஊரை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது