இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,093 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: புதிதாக 6,093 பேருக்கு கொரோனா உறுதி ... இந்தியாவில் இன்று கொரோனா பாதிப்பு மீண்டும் 6 ஆயிரத்திற்கு மேல் பதிவாகி உள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 093 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. எனவே இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,44,84,729 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அதேபோன்று , தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,28,121 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,06,972 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு தற்போது 49,636 பேர் சிகிச்சை பெற்று கொண்டு வருகின்றனர். மேலும் இந்தியாவில் இதுவரை மட்டும் 2,14,55,91,100 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 28,09,189 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.