அலாஸ்கா தீபகற்பத்தில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அமெரிக்கா: சுனாமி எச்சரிக்கை... அமெரிக்காவின் அலாஸ்கா தீபகற்பத்தில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இன்று அதிகாலை அலாஸ்காவில் உள்ள சாண்ட் பாயிண்ட் என்ற பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் 9.3 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், அலாஸ்காவில் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1964ம் ஆண்டு அலாஸ்காவில் 9.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி வந்ததில் 250க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.