தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 2 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 240 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 531 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், நேற்று 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:- அரியலூர் - 11 செங்கல்பட்டு - 499 சென்னை - 3,093 கோவை - 1,051 கடலூர் - 87 தர்மபுரி - 96 திண்டுக்கல் - 158 ஈரோடு - 348 கள்ளக்குறிச்சி - 16 காஞ்சிபுரம் - 233 கன்னியாகுமரி - 198 கரூர் - 98 கிருஷ்ணகிரி - 150 மதுரை - 279 நாகை - 116 நாமக்கல் - 197 நீலகிரி - 139 பெரம்பலூர் - 6 புதுக்கோட்டை - 81 ராமநாதபுரம் - 28 ராணிப்பேட்டை - 82 சேலம் - 448 சிவகங்கை - 55 தென்காசி - 36 தஞ்சாவூர் - 129 தேனி - 69 திருப்பத்தூர் - 33 திருவள்ளூர் - 444 திருவண்ணாமலை - 110 திருவாரூர் - 122 தூத்துக்குடி - 117 திருநெல்வேலி - 140 திருப்பூர் - 567 திருச்சி - 154 வேலூர் - 301 விழுப்புரம் - 88 விருதுநகர் - 88 விமானநிலைய கண்காணிப்பு - 3