தமிழகத்தில் கொரோனாவுக்கு 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை; மாவட்ட வாரியாக தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துள்ளது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மாநிலத்தில் நேற்று புதிதாக 1 ஆயிரத்து 181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 2 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 9 ஆயிரத்து 880 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1 ஆயிரத்து 240 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்து 80 ஆயிரத்து 531 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், நேற்று 12 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 931 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் விவரம்:-
அரியலூர் - 11
செங்கல்பட்டு - 499
சென்னை - 3,093
கோவை - 1,051
கடலூர் - 87
தர்மபுரி - 96
திண்டுக்கல் - 158
ஈரோடு - 348
கள்ளக்குறிச்சி - 16
காஞ்சிபுரம் - 233
கன்னியாகுமரி - 198
கரூர் - 98
கிருஷ்ணகிரி - 150
மதுரை - 279
நாகை - 116
நாமக்கல் - 197
நீலகிரி - 139
பெரம்பலூர் - 6
புதுக்கோட்டை - 81
ராமநாதபுரம் - 28
ராணிப்பேட்டை - 82
சேலம் - 448
சிவகங்கை - 55
தென்காசி - 36
தஞ்சாவூர் - 129
தேனி - 69
திருப்பத்தூர் - 33
திருவள்ளூர் - 444
திருவண்ணாமலை - 110
திருவாரூர் - 122
தூத்துக்குடி - 117
திருநெல்வேலி - 140
திருப்பூர் - 567
திருச்சி - 154
வேலூர் - 301
விழுப்புரம் - 88
விருதுநகர் - 88
விமானநிலைய கண்காணிப்பு - 3