மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டி சமைத்த தாய்

பிரேசில்: மகளை கொன்று துண்டு துண்டாக வெட்டிய தாய்... பிரேசிலில், பெற்ற மகளைக் கொன்று, உடலைத் துண்டு துண்டாக வெட்டி சமைத்த கொடூர மனம் படைத்த தாயாரை போலீசார் கைது செய்தனர்.

கணவரை பிரிந்த ரூத் ஃபுளோரியானோ 9 வயது மகள் மற்றும் ஆண் நண்பருடன் செள பவுலோ நகரில் வசித்துவந்தார். கடந்த வாரம் வீட்டிற்கு வந்த ஆண் நண்பரின் தாயார், பிரிட்ஜில் வெட்டப்பட்ட உடல் பாகங்கள் இருந்ததை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

இது தொடர்பாக ஃபுளோரியானோ-விடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கணவரை விவாகரத்து செய்ததால் மகள் அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டு வந்ததாகவும், கடந்த 8ம் தேதி போதையில் மகளை கத்தியால் குத்தி கொன்றதாகவும் ஒப்புக்கொண்டார்.

சடலத்தை அப்புறப்படுத்துவது எப்படி என இணையத்தில் தேடிய ஃபுளோரியானோ, உடலைத் துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்து, கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து அவற்றை அப்புறப்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.