நிலச்சரிவில் மலாவியில் மலைக்கிராமமே அடித்து செல்லப்பட்டது

ஆப்பிரிக்கா: நிலச்சரிவில் மலைக்கிராமமே அடித்து செல்லப்பட்டது.. கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழையால், வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு மலைக்கிராமமே அடித்துச் செல்லப்பட்டது.

இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் அருகிலுள்ள ஒரு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மலாவி நாட்டை புரட்டிப் போட்ட ஃப்ரெடி புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 326ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.