திருப்பதி மலையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு

திருப்பதி: திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது.

பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில் சென்று புகுந்து பதுங்கி கொண்டது.

தேவஸ்தான பாம்பு பிடிவீரர் பாஸ்கர் நாயுடுவுக்கு பொதுமக்கள் தகவல் அளித்ததை அடுத்து அங்கு வந்து அவர் பாம்பைப் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தார்.

இதற்கு முன்பு திருப்பதியில் சிறுத்தைகளால் சிறுமிகள் உயிரிழப்பு ஏற்பட்ட சம்பவங்களும் நடந்தது குறிப்பிடத்தக்கது.