இந்தோனேசியாவில் டிரக் மீது ரயில் மோதி விபத்து

இந்தோனேசியா: இந்தோனேஷியாவில் டிரக் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சுரபயா மற்றும் ஜகார்த்தா இடையே மத்திய ஜாவாவின் தலைநகரான செமராங் நகரில் கிராசிங்கை கடக்க முயன்ற ட்ரக் ஒன்று தண்டவாளத்தில் சிக்கியது.

வெகுநேரம் போராடியும் அதனை எடுக்க முடியாத நிலையில், அந்த வழியாக வந்த பயணிகள் ரயில் டிரக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் டிரக் அருகில் இருந்த எஃகு பாலத்திற்குள் தள்ளப்பட்டு தீப்பிடித்து எரிந்தது.

இந்த விபத்தில் ரயிலில் இருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்த ஒருவர் மட்டுமே காயமடைந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.