நடிகை சித்ரா வழக்கில் ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை

ஆதாரங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்... சென்னையை அடுத்த நசரத்பேட்டை அருகே, பிளசண்ட்ஸ் ஸ்டே ஹோட்டல் ரிசாட்டின், சொகுசு வில்லாவில், சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த புதன்கிழமை அதிகாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக, சித்ராவை, அவசர, அவசரமாக, கடந்த அக்டோபர் மாதம் பதிவு திருமணம் செய்து கொண்ட, அமைந்தகரை ஹேம்நாத் என்பவரிடம், கடந்த 5 நாட்களாக போலீசார், துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.

நடிகை சித்ரா வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதன் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை மாநகரக் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், சித்ரா பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள், இயக்குநர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஆகியோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.