தந்தை கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்திய மகன்

தென்காசி: தந்தையின் கல்லறையை பார்த்தார்... தென்காசி மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் தனது தந்தையின் கல்லறையை 55 ஆண்டுகள் கழித்து கடல் கடந்து சென்று பார்த்துள்ளார்.

குழந்தைகள் இல்லம் நடத்திவரும் வெங்கடாம்பட்டியைச் சேர்ந்த திருமாறன் என்பவரின் தந்தை பூங்குன்றன் மலேசியாவில் ஆசிரியராக பணிபுரிந்து கடந்த 1967-ம் ஆண்டு மறைந்தார். பூங்குன்றனின் கல்லறையைத் தேடி அவரது மகன் திருமாறன் மலேசியா சென்றார்.

கர்லிங் பகுதியில் பூங்குன்றன் ஆசிரியராகப் பணியாற்றிய பள்ளிக்குச் சென்று, பழைய மாணவர்களை தேடிப்பிடித்து அவர்கள் மூலம் தனது தந்தையின் கல்லறையை கண்டுபிடித்து அஞ்சலி செலுத்தினார்.

அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது என திருமாறனின் இந்த முயற்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.