நெல்லூர் அருகே கடலில் ஆந்திர – தமிழக மீனவர்கள் மோதல்

ஆந்திரா: கடலில் மோதல்... ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே தமிழக மீனவர்களின் படகில் சிக்கி ஆந்திர மீனவர்களின் வலை அறுந்ததாகக் கூறப்படும் நிலையில், நடுக்கடலில் இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.

கடலூரைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் ஆந்திர எல்லையான இசக்கப்பள்ளி மீனவ கிராமம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மீனவர்கள் விரித்திருந்த வலை தமிழக மீனவர்களின் படகில் சிக்கி அறுந்ததாகக் கூறப்படுகிறது.

எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக ஏற்கனவே தமிழக மீனவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த ஆந்திர மீனவர்கள், வலை அறுந்ததை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், தமிழக மீனவர்கள் தாக்கியதில் ஆந்திர மீனவர் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.