ஓணம் பண்டிகையை ஒட்டி லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

கேரளா: சோதனை நடத்தினர்... கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் 80 சோதனைச் சாவடிகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

பண்டிகையை முன்னிட்டு சோதனைச் சாவடிகளில் லஞ்சம் வாங்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் கலால் துறையின் 39 சோதனை சாவடிகள், மோட்டார் வாகனத் துறையின் 29 சோதனை சாவடிகள், கால்நடை பராமரிப்பு துறையின் 12 சோதனை சாவடிகளில் சோதனை நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் அதிகாலையில் குறிப்பிட்ட நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதில், பல்வேறு பகுதிகளில் கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.