தஞ்சாவூரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலைய மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணி நடைபெறுவதால் நாளை 6ம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சாவூர் மணிமண்டபம் துணை மின் நிலைய மின்பாதையில் புதிய மின்கம்பிகள் மாற்றும் பணிகள் நாளை 6ம் தேதி நடக்கிறது. இதனால் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

இதன்படி மகளிர் போலீஸ் ஸ்டேஷன் ஜெயில் ரோடு, ராமநாதன் ஆஸ்பத்திரி, மேம்பாலம் மெயின் ரோடு வரை மின்விநியோகம் இருக்காது. பொது மக்கள் மின்தடை குறித்த விபரங்களுக்கு 9498794987 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.