தூய்மை பணியாளர்கள் இளைப்பாற வசதிகள் ஏற்பாடு.

சென்னை: தூய்மை பணியாளர்கள் இல்லையெனில் தூய்மையாக இருக்காது நாடு இது உண்மை. அவர்கள் இளைப்பாற இடம் வேணும் அல்லவா. அதற்காக தான் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்.தூய்மை பணியாளர்கள் அவ்வபோது அமர்ந்து இளைப்பாரவும், மதிய வேளைகளில் அமர்ந்து உண்ணவும் வசதி செய்து தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறைஅன்பு கடிதம் அனுப்பி உள்ளார்.அந்த கடிதத்தலில் அலுவலகங்களில் நாம் அமர்ந்து பனி ஆற்றும் அறைகளும், உபயோகப்படுத்தும் ஒய்வு அறைகளும் நாள்தோறும் தூய்மைபடுத்தி துலங்க செய்யும் தூய்மை பனி ஆளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதை பற்றி பலரும் என் கவனித்திற்கு கொண்டு வருகின்றனர்.

நீங்கள் இதில் நேரடியாக தலையிட்டு பணிக்கு நடுவே அவர்கள் அவ்வபோது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் உட்கார்ந்து உணவு அருந்தவும், நீர் பருகவும் போதிய வசதிகள் ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

புதிதாக கட்டப்படுகிற இடங்களில் அவர்கள் உபயோகப்படுத்தும் வகையில் போதிய வசதி செய்து தர வேண்டும் என்று கேடு கொண்டார்.