கோவை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்ட் 29 ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை

கோவை : தமிழகத்தில் ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 29 -ஆம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட இருக்கிறது. அந்த வகையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உ ள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதனை அடைத்து இது குறித்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கோவை மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு ஆகஸ்ட் 29 ஆம் தேதி விடுமுறை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே இதற்கு பதிலாக அந்த அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வருகிற செப். 2 ஆம் தேதி முழு பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை நாளில் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.