பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் ஆகஸ்டு 5-ந் தேதி உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ந் தேதி வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

எனவே விழாவை முன்னிட்டு 5.8.22 அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டும் இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்ட்டுள்ளது.

மேலும் இது செலாவணி முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் அல்ல. இந்த விடுமுறைக்கு பதிலாக 13.8.2022 அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் அவர்கள் தெரிவித்து உள்ளார்.