பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிப்பு...தென்காசியில் பரபரப்பு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகளை சாலையில் வீசி செல்லும் சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. அவ்வாறு சாலையில் வீசிய குழந்தைகளை மீட்டு காப்பகங்களிலும் ஒப்படைக்கப்படுகின்றன.

இந்நிலையில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. தீயில் எரிந்த குழந்தையின் உடலை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த குழந்தையின் பெற்றோர் யார்? என்றும், ஏன் இப்படி செய்தனர் என்றும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.