தற்கொலை செய்து கொண்ட சித்ராவின் நெருங்கிய தோழி வெளியிட்ட பகீர் தகவல்

சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர் அளித்த பேட்டியில் பல பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சீரியல் நடிகையான சித்ராவின் மரணம் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் அடுத்தடுத்து மரணம் குறித்த தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.

தூக்கில் தொங்கிய சித்ராவின் முகத்திலும் உடம்பிலும் காயங்கள் உள்ளதால் அவரது மரணத்தில் ஏகப்பட்ட சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து சித்ராவின் நெருங்கிய தோழியான ரேகா நாயர் அளித்த பேட்டியென்றில் சித்ராவின் கணவர் பற்றிய பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவர் அதில் கூறியாதாவது, “ஹேமந்த்தை எனக்கு தெரியும். நீ தப்பான ஆளை தேர்வு செய்திருக்கிறாய். அவர் சரியான ஆள் கிடையாது, அவர் பெண்கள் விஷயத்திலும் சரியானவர் இல்லை, பல்வேறு பப்புகளில் அவரை பார்த்திருக்கிறேன். பல பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருந்திருக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

மேலும் இது தற்கொலையாக தெரியவில்லை, தற்கொலை பண்ண வைக்கிற அளவிற்கு அதுவும் ஒரு கொலை தான் என்று கூறியுள்ளார்.

சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ரேகா நாயர் கூறியிருக்கும் விஷயங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.