மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இன்று பொறுப்பேற்பு

இன்று பொறுப்பேற்பு... மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக பொது நிர்வாக மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சால் நியமனம்பெற்றுள்ள கே.கருணாகரன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்தா தலைமையில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களினால் புதிய அரசாங்க அதிபருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

இதையடுத்து, மாவட்டச் செயலகத்தில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்ட அரசாங்க அதிபர், அதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

அத்துடன், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடல்களையும் மேற்கொண்டார்.

களுதாவளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை கருணாகரன் இலங்கை நிர்வாக சேவை விசேட தரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி மற்றும் காணி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியிருந்தார். இந்நிலையிலேயே மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக நியமனம் பெற்றுள்ளார்.