நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மீது பாஜக தலைவர் குற்றச்சாட்டு

நெல்லை: பாஜக தலைவர் குற்றச்சாட்டு... நீட் தேர்வு விவகாரத்தில் ஒன்றுமே இல்லாத பிரச்சினையை பெரிதாக்கி மாணவர்களை தற்கொலைக்கு தூண்டியது தி.மு.க. தான் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, இந்தியாவில் வேறு எங்கும் நீட் தேர்வு தொடர்பாக தற்கொலைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தென் தமிழகத்தில் போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததே நாங்குனேரி சம்பவம் போன்றவற்றுக்கு காரணம் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

மேலும் தமிழகத்தில் ஜாதியை முன்னிலைப்படுத்தி வெளியாகும் திரைப்படங்களும் மாணவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.