தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக எம்எல்ஏக்கள்

சென்னை: பாஜ உறுப்பினர்கள் வெளிநடப்பு... தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலிருந்து பாரதிய ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான உறுப்பினர்களின் பேச்சைக் கண்டித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ. 18) காலை 10 மணியளவில் தொடங்கியது. முதலில் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றும் விதமாக தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த சட்டப்பேரவை உறுப்பினர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.