அவசர கதவை தெரியமால் திறந்ததாக மன்னிப்பு கேட்டாராம் பாஜக எம்.பி.,

சென்னை: பாஜக எம்பி., தேஜஸ்வி தெரியாமல் அவசர கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு கடந்த மாதம் 10ம் தேதி இண்டிகோ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கர்நாடக மாநில பா.ஜ.க. தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட எம்பி பயணிகள் பயணம் செய்தனர். விமானம் ஓடுபாதையில் இருந்தபோது திடீரென அவசர கதவு திறந்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

விமானம் நிறுத்தப்பட்டு பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். சுமார் 2 மணி நேரம் கழித்து விமானம் மீண்டும் புறப்பட்டது. அதே விமானத்தில் தி.மு.க. சபாநாயகர் அரசகுமார் இந்த தகவலை தெரிவித்தார்.

இதையடுத்து, விமானத்தின் அவசர கதவு திறக்கப்பட்டது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில், இது குறித்து இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தேஜஸ்வி தெரியாமல் அவசர கதவை திறந்துவிட்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டதாகவும் கூறியது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மன்னிப்பு மட்டும் போதுமா? இந்தப் பிரச்சினையை ஏன் மூடி மறைக்க வேண்டும்? இதை ஏன் விசாரிக்கவில்லை? என பல்வேறு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்