மணப்பாறையில் சிபிஐ அதிகாரிகள் சோதனை... முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்

மணப்பாறை: பட்டதாரி வீட்டில் சிபிஐ சோதனை... திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆபாச செயலிகளை ஹேக் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்த புகாரின் பேரில் பட்டதாரி வீட்டில் சிபிஐயினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.

பூமாலைபட்டியைச் சேர்ந்த ராஜா என்பவரது வீட்டில் நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் மற்றும் 2 வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 6 பேர் மணப்பாறை போலீசார் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

13 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் முடிவில் ராஜா பயன்படுத்தி வந்த செல்போன், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், பென்டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் 2வது நாளாக இன்றும் அவரிடம் விசாரணை நடத்திட சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆபாச செயலிகளை ஹேக் செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி பணம் சம்பாதித்த புகாரின் பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.