மீண்டும் கைது செய்யப்படும் வாய்ப்பு... ஆதரவாளர்கள் அமைதி காக்க இம்ரான் அறிவுறுத்தல்

பாகிஸ்தான்: மீண்டும் கைது செய்யப்படலாம்… மீண்டும் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதால் தமது ஆதரவாளர்களை அமைதி காக்கும்படி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் தற்போதைய அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த இம்ரான் கான், டிவிட்டர் மூலமாக நேரலையில் உரை நிகழ்த்தினார்.

சட்டரீதியாக ஜாமீன் பெற்றுள்ள போதும் தாம் மீண்டும் கைது செய்யப்படலாம் என்று அப்போது இம்ரான்கான் கூறினார்.

இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தமது அமைச்சர்களுடன் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார்