தமிழகம் போல் டெல்லியிலும் சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த முதல்வர் கெஜ்ரிவால் முடிவு

புதுடில்லி: சிறப்பு சட்டசபை கூட்டம் நடத்த முடிவு... தமிழகம் போல் தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு சட்டசபை கூட்டத்தை நடத்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கவர்னர்கள் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் சில நாட்களுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் குறித்து பாஜக அல்லாத முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களிலும் இதேபோன்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தைப் போலவே, டெல்லி சட்டப் பேரவையில் கவர்னர்கள் மூலம் மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என டெல்லி அரசும் தீர்மானம் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆளும் ஆம் ஆத்மி அரசு திங்கள்கிழமை சிறப்பு சட்டசபை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.