அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடம்... இன்றைய நிகழ்ச்சிகளை ஒத்திவைத்த முதல்வர்!

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் துரைக்கண்ணுக்கு திடீரென மூச்சுத்திணறல் அதிகமானது. இதய பாதிப்பும் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. மேலும், அமைச்சர் துரைக்கண்ணு உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும் தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தலைமை செயலகத்தில் இன்று காலை பல்வேறு நிகழ்ச்சிகள் இருந்தன. தமிழகத்தின் பல பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட திட்டப்பணிகளை காணொலி வாயிலாக அவர் திறந்து வைக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் அமைச்சர் துரைக்கண்ணு மாக இருப்பதை கேள்விப்பட்டதும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒத்திவைத்துவிட்டார்.