காணொளி வாயிலாக இந்திரா நகர் யூ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: காணொளி வாயிலாக திறப்பு... ராஜீவ் காந்தி சாலை இந்திரா நகர் சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யூ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாகத் திறந்து வைத்தார்.

ஓ.எம்.ஆர் சாலையில் சோழிங்கநல்லூரிலிருந்து திருவான்மியூர் செல்லும் வாகனங்கள் டைடல் பார்க்கில் சிக்னலுக்காக காத்திருக்காமல் யூ மேம்பாலத்தை பயன்படுத்தி அடையாறு மற்றும் திருவான்மியூர் செல்ல முடியும்.

நிகழ்ச்சிக்குப் பின் பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், டைடல் பார்க் சிக்னல் சந்திப்பில் தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி இறுதிக்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.