அமுல் நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மத்திய அமைச்சருக்கு கடிதம்... ஆவின் பால் கொள்முதலை பாதிக்கும் வகையில் அமுல் செயல்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை அமுல் நிறுவியுள்ளது.

கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது குறித்தும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமுல் நிறுவனத்தின் எல்லை தாண்டிய கொள்முதல், ‘வெண்மை புரட்சி’ கொள்கைக்கு எதிராக அமைவதுடன், நுகர்வோர்களுக்கு மேலும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.