ஈறு பிரச்னையை போக்க உதவும் கிராம்பு... நல்ல பலன் கிடைக்கும்

சென்னை: ஈறு பிரச்சினை என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இலகுவாக வரக்கூடிய ஒரு பிரச்சினையாகும். பற்களின் வேர்களை பாதுகாப்பது தான் ஈறின் தொழிலாக காணப்பட்டு வருகின்றது.

ஈறு வெளிர் நிறத்தில் இருந்தால் எதோ ஒரு வகையில் பிரச்சினை வரபோகின்றது என்று தான் அர்த்தம். அதனால் தான் ஈறு வீக்கமடைந்து, வலி ஏற்பட்டும் மற்றும் இரத்தக்கசிவும் ஏற்படும்.

ஈறு வீங்குவதற்கான காரணங்கள், ஊட்டச் சத்து குறைபாடு, தொற்று நோய் மற்றும் கர்ப்ப காலம், தவறான முறையில் பல் கட்டுதல் மற்றும் தவறான முறையில் பல் விளக்குதல் போன்ற காரணத்தினாலும் இது வீங்கி வருகிறது.

இதனால் அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விடயங்களை வீட்டில் இருந்தவாரே தடுக்கலாம். ஒரு சில அடிப்படை மூலிகைகளை வைத்தும் இதை முறையாக செய்யலாம். கிராம்பு பொடியை பற்பொடியில் கலந்து, அதை பயன்படுத்தினால் பல் வலி மற்றும் ஈறுவலி குணமாகும்.

கிராம்பை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், வாயில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.