சென்னை: இந்தியாவில் உதான் திட்டத்தின் கீழ் சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களை தவிர்த்து பிற விமான நிலையங்களிலிருந்து முக்கிய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க அரசு முடிவு செய்தது.
எனவே அதன்படி கடந்த 2018 -ம் ஆண்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டது. இந்த விமான சேவை வாயிலாக நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள் பயனடைந்து வந்தனர்.
இதன் இடையில் பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக சென்னை டூ சேலம் இடையேயான விமான சேவையை நிறுத்தபட்டது.இந்த விமான சேவையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து இது தொடர்பாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.எனவே இதற்கு பதில் அளித்த அவர் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்குவது பற்றி பரிசீலனை நடைபெற்று வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்துள்ளார்.